×

வீட்டு பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் பணம் கொள்ளை

தேவாரம், அக். 16: தேவாரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 90 ஆயிரம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்தவர் செல்வி (37), இவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். தனது வாழ்வாதாரத்திற்காக தேவாரம் பஸ் ஸ்டாண்ட் அருகே பானிபூரி கடை நடத்துகிறார். தினந்தோறும் மாலை பானிபுரி கடைக்கு சென்று வியாபாரத்தை கவனிப்பது வழக்கம். இதேபோல் கடந்த 13ம் தேதி செல்வி தனது வீட்டை பூட்டி விட்டு பானிபூரி கடைக்கு சென்று விட்டார்.

வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது விட்டில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ.90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து தேவாரம் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தேவாரம் எஸ்.ஐ. ஜெகநாதன் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post வீட்டு பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Devaram ,Dewar ,Devaram… ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...